மாலத்தீவில் இரு மலேசியர்கள் கைது! RM 32 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சிக்கியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 30: மாலத்தீவிற்கு சுமார் 37 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த முயன்ற இரண்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமை காலை துபாயில் இருந்து EK656 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் வேலனா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 44 வயதான மலேசியர் ஒருவரின் பயணப் பையில் மாலத்தீவு சுங்க அதிகாரிகள் 15 கிலோ கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு  மலேசிய ரிங்கிட்டுக்கு 37 லட்சம்  என மதிப்பிடப்பட்டதாகவும், முதற்கட்ட சோதனையில் அது கஞ்சா  என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் மற்றொரு சந்தேக நபரான 41 வயது மலேசிய ஆடவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் ஐந்து நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக  சர்வதேச சட்ட அமலாக்கத் துறையுடன்   போலீஸார் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும், சந்தேக நபர்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு இருப்பதாக போலிஸார் நம்புதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *