ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்.யாரை முட்டாளாக்குகிறார்கள்- மோடியை விமசித்த பிரகாஷ்ராஜ்!

top-news
FREE WEBSITE AD

இந்திய பிரதமர் மோடி வசித்து வரும் பிரதமர் இல்லத்தில் பசுமாடு ஒன்று கன்று ஈன்றதாக செய்தி வெளியானது. மேலும் பிரதமர் மோடி அந்தக் கன்றுக்குட்டியுடன் காணொளி எடுத்து அதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த கன்றுகுட்டிக்கு தீபஜோதி எனப் பெயரிட்டு, அதற்குப் பொன்னாடை போர்த்தி, மாலையிட்டு தூக்கிக் கொஞ்சும் அந்த காணொளி சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்திய பிரதமர் மோடி, கன்றுக்குட்டியுடன் விளையாடும் காட்சியை பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், "மணிப்பூர் பற்றி எரிந்துக்கொண்டிருக்கும்போது படப்பிடிப்புக்கு உங்களுக்கு நேரம் கிடைக்கிறதா?" என்று மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போதும், மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் போதுமான நிதி குவிந்திருக்கும் போதும், இதுபோல் நாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்த நேரம் கிடைக்கிறது" என கூறியுள்ளார்.

உயிரியல் ரீதியாக பிறக்காத ஒருவர் என்று ஏற்கனவே மோடி பேசியதை தமது பதிவில் அவர் சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். அதோடு, இதுபற்றி என்ன தோன்றுகிறது மக்களே என்றும் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். கன்றுகுட்டியுடன் பிரதமர் மோடி இருக்கும் அந்தப் புகைப்படத்தையும், நாகலாந்தின் ஃபெக் மாவட்ட பா.ஜ.க-வின் அறிக்கையையும் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், 'ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்… யாரை முட்டாளாக்குகிறார்கள்' என விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகிவருகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *