மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியதில் பெண் ஒருவர் பலி!
- Shan Siva
- 21 Jul, 2025
குவாந்தான், ஜூலை 21: நேற்று குவந்தான் Paya Bungor காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜாலான் குவாந்தான்-மாரானில் மோட்டார்
சைக்கிள் ஒரு நாயுடன் மோதியதில் உணவுக் கடை உதவியாளர் பலியானார் மற்றும் அவரது பின்னால்
சவாரி செய்தவர் காயமடைந்தார்.
ஃபெல்டா லெப்பார்
ஹிலிர் 4 ஐச் சேர்ந்த 54 வயதான Che Zaiton என்ற அந்த நபர் மாலை 6.30
மணியளவில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது பின்னால்
சவாரி செய்த 41 வயது இல்லத்தரசி காயங்களுக்கு உள்ளாகி தற்போது தெங்கு அம்புவான்
அப்சான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருவரும் தெமர்லோவிலிருந்து
ஃபெல்டா லெப்பார் ஹிலிருக்குப் பயணம் செய்து கொண்டிருந்ததாக ஆரம்பக்கட்ட
விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



