மலையேறும்போது பள்ளத்தில் விழுந்த பெண்! பத்திரமாக மீட்பு!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஜூலை 9: ஈப்போ, கோர்பு மலையில் இறங்கும் போது 10 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து காயமடைந்த பெண் இன்று அதிகாலை வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.

35 வயது மதிக்கத்தக்க சம்பந்தப்பட்ட நபர் அதிகாலை 1.30 மணியளவில் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டார் என்று பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோட்ஸி நோர் அஹ்மத் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் ஜூலை 6 அன்று தொடங்கிய 34 பங்கேற்பாளர்களுடன் கோர்பு மலை மற்றும் கயோங் மலை நடைபயணத்தில் பங்கேற்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *