வாகனத்தில் தகாத உறவு! ஆடவர் இருவர் கைது
- Shan Siva
- 02 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 2: கடந்த வெள்ளிக்கிழமை பொது இடத்தில் வாகனத்திற்குள்
அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீ முர்னி
பகுதியில் அதிகாலை 2 மணியளவில்
ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளால் 29 மற்றும் 24 வயதுடைய சம்பந்தப்பட்ட
ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஜாலான்
தாமான் இந்தான் பைடூரி வழியாக ஒரு வாகனத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில்
இருவரையும் போலீசார் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை சோதனை
செய்தபோது, உள்ளே இருந்த
இரு ஆண்களும் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுவது
கண்டறியப்பட்டதாக செந்தூல் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அகமது சுகர்னோ முகமட்
ஜஹாரி தெரிவித்தார்.
காரில் நடத்தப்பட்ட
சோதனைகளில், பின்புற இருக்கையின்
கீழ் அசிங்கம் செய்ததன் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சந்தேக நபர்கள்
இருவரையும் சோதனை செய்ததில், வாகனம் மீதும்
எந்த முன் குற்றப் பதிவுகளும் இல்லை என்பது தெரியவந்தது என்று அஹ்மத் சுகர்னோ கூறினார்.
இருவரும் கைது
செய்யப்பட்டு ஜின்ஜாங் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அஹ்மத் சுகர்னோ
கூறினார்.
அவர்கள் மூன்று
நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377A இன் கீழ்
விசாரிக்கப்படுகிறது, இது இயற்கையின்
ஒழுங்கிற்கு எதிரான பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



