ஹஜ் புனித யாத்திரையில் மேலும் இரண்டு மலேசிய யாத்ரீகர்கள் இறப்பு!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட மேலும் இரண்டு பயணிகள்  இறந்ததாகவும், அவர்களுடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர் ஹஜ் புனித யாத்திரையின்போது  இறந்துள்ளதாகவும் மலேசிய ஹஜ் தூதுக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ சையத் சலே சையது அப்துல் ரஹ்மான் உறுதி செய்தார். 

கெடா அலோர் ஸ்டாரைச் சேர்ந்த கசாலி அஹ்மத் என அடையாளம் காணப்பட்ட 71 வயதான ஆண் பயணி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அடிவயிற்றில் இரத்த நாளங்கள் அடைப்பு காரணமாக காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நபரான திரெங்கானுவின் jertih  பகுதியைச் சேர்ந்த 53 வயதான  நார்மடியா மாட் அலி  நுரையீரல் தொற்றுநோயால்  உறுப்பு செயலிழந்து மாண்டதாக டத்தோஸ்ரீ சையத் சலே சையது அப்துல் ரஹ்மான் உறுதி செய்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *