கழிவுநீர் குழியில் சிக்கி இருவர் மரணம்!

top-news
FREE WEBSITE AD


கெடா, ஜூலை 30: கெடா மாநிலம் ஜித்ராவில் உள்ள எஸ்எம்கே பாயா கெமுண்டிங் அருகே கழிவுநீர் குழியில் சிக்கி இருவர் இன்று உயிரிழந்தனர்.

தங்களுக்கு காலை 9.29 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் பஸ்டன் கருடின் தெரிவித்தார்.

சுமார் 4.5 மீ ஆழமுள்ள கழிவுநீர் குழியில் 27 மற்றும் 31 வயதுடைய பலியான இருவர் காணப்பட்டதாக அவர் கூறினார்.

துளைக்குள் இறங்குவதற்கு முன், அந்த இடத்தில் உள்ள வாயு அளவுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, தீயணைப்பு வீரர்கள் கேஸ் டிடெக்டர்களைப் பயன்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட இருவரும் வெளியே கொண்டு வரப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாகவும் பஸ்டன் கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *