விளக்கம் தேவை! தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெர்சாத்து MP-க்கள் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD



கோலாலம்பூர், ஜூன் 3: கட்சி விசுவாச உறுதிமொழியில் சரியான நேரத்தில் கையொப்பமிடத் தவறிய, பெர்சாத்து கட்சியின்  அன்வார் ஆதரவு ஏழு  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸின் நியாயத்தன்மை குறித்த தங்கள் கேள்விகளுக்குக் கட்சியிடமிருந்து பதிலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விசுவாசத்தை உறுதியளிக்கக் கோரிய நோட்டீசுக்கு இது குறித்து  கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக குவா முசாங் எம்பி அசிசி அபு நைம், தெரிவித்தார்.

அதனால்தான் மே 31 காலக்கெடுவிற்கு முன்னர் தாம் பதிலளிக்கவில்லை என்று  அவர் கூறினார்.

கையொப்பமிடப்பட்ட நோட்டீசை மே 31க்குள் திருப்பித் தரத் தவறியதால், ஆறு எம்.பி.க்கள் மற்றும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய ஏழு பேரும் கட்சி உறுப்பினர்களாக இல்லை என்று நேற்று பெர்சாத்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது!.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *