தனியார் பல்கலைக்கழகத்தில் வெடிவிபத்து! ஒருவர் பலி; 9 பேர் காயம்!-
- Shan Siva
- 12 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 12: கோலாலம்பூர், புக்கிட் டாமன்சாரா, ஜாலான் செமந்தானில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
பல்கலைக்கழக கட்டிடத்தின்
நான்காவது மாடியில் உள்ள சிற்றுண்டிச்சாலையை ஒட்டிய பராமரிப்புப் பகுதியில் இருந்த
ஏர் கண்டிஷனிங் கம்ப்ரசர் வெடித்து இச்சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர்
காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
கட்டிடத்தின் சுவர்களைச் சேதப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்த வெடிப்பாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



