எண்டாவ் பாலத்தில் விபத்தில் சிக்கிய விரைவுப் பேருந்து! 30 பயணிகள் தப்பினர்

top-news
FREE WEBSITE AD

ரொம்பின், டிச 27: பகாங்-ஜொகூர் எல்லையில் உள்ள எண்டாவ் பாலத்தில் நேற்று இரவு ஒரு டிரெய்லருடன் பேருந்து மோதியதில் பேருந்தில் இருந்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.

ஜொகூர் பாருவிலிருந்து கிளந்தான் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தபோது இரவு 11.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக ரொம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் ஷெரிப் ஷாய் ஷெரிப் மோண்டோய் தெரிவித்தார்.

குவாந்தானிலிருந்து ஜொகூர் பாருவுக்கு இரும்பு சுமையை ஏற்றிச் சென்ற டிரெய்லர் பாலத்தைக் கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்தது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிரெய்லர் வலது பாதையில் திரும்பி எதிரே வந்த பேருந்து மீது மோதியது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

 இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும், ஏழு முதல் 50 வயதுக்குட்பட்ட 30 பயணிகளும் காயமடையவில்லை என்று ஷெரிப் ஷாய் கூறினார்.

சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பயணிகள் மாற்றுப் பேருந்தில் தங்கள் இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

வாகனத்தின் கட்டுப்பாட்டை டிரெய்லர் ஓட்டுநர் பராமரிக்கத் தவறியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக, சாலைப் போக்குவரத்து விதிகள் 1959 இன் விதி 10 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *