முன்னாள் மனைவி கொலை! - மியான்மர் பிரஜை கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 25:: கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே, நேற்று மதியம், தனது முன்னாள் மனைவியும் மியான்மர் நாட்டவருமானவரைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில், மியான்மர் நாட்டவர் ஒருவரை காவல்துறை ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது.

கெந்திங் கோர்ட் அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் மயக்க நிலையில் இருந்த பெண்ணைக் கண்டறிந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் கூறினார்.

சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும், பொறாமையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு ஆயுதத்தையும் காவல்துறை கைப்பற்றியுள்ளதுஎன்று அவர் ஒரு அறிக்கையில் மேலும் கூறினார்.

கோலாலம்பூர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், மார்பில் ஏற்பட்ட கத்திக்குத்து காயமே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி செய்து உயிர் மீட்க முயற்சிப்பது தெரிகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *