எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்! - மனிதவள அமைச்சர் ஸ்டீவென் சிம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 17: தன்னைச் சந்திக்க விடாமல் குறிப்பிட்ட நபர்கள் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று மறுத்தார்.

 யாரையும் சந்திப்பதைத் தடுக்குமாறு தனது அதிகாரிகளுக்கு தாம் ஒருபோதும் அறிவுறுத்தவில்லை என்றும்தனது கதவுகள் அனைவருக்கும் எப்போதும் திறந்திருக்கும் என்றும் சிம் கூறினார்.

 மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (HRD Corp) முன்னாள்  தலைமை இயக்க அதிகாரி (COO) தன்னைச் சந்திப்பதில் இருந்து தடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

 தன்னைச் சந்திப்பதைத் தடுப்பதற்கு பேறு யாரேனும் இருக்கிறார்களா என்று தனக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர்ஒருவேளை அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் அதிக அளவு வேலை செய்ததால்  இருக்கும் என்றும், எனவே பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்!

 ஒரு வேளை சந்திப்பைப் பெற முடியவில்லை என்றால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் யாரையும் சந்திக்க எனது கதவு எப்போதும் திறந்திருக்குமென்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *