பொய் சொல்வது நல்லதல்ல; அது பாவம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 20: வெளிநாட்டுத் தலைவர்கள் தன்னைச் சந்திப்பதை அன்வார் தடுத்ததாக மகாதீர் தெரிவித்திருந்ததை அடுத்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அஅரசியல் செயலாளர் கமில் முனிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படி மகாதீரை சந்திப்பதை அன்வார் தடுத்ததாகக் கூறப்படும் வெளிநாட்டுத் தலைவர்களின் பெயரைக் கூறுமாறு மகாதீருக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

அந்தத் தலைவர்கள் யார்? அவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்? என கமில் தனது X  பதிவில் கேள்விகள முன்வைத்துள்ளார்.

அவர்களைக் குறிப்பிடுங்கள். இல்லையென்றால், அன்வாரைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கி, அரசியல் அனுதாபத்தைப் பெற பொய் சொல்கிறீர்கள் என்றுதான் பொருள்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொய் சொல்வது நல்லதல்ல… அது பாவம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஒரு பேட்டியில், மலேசியாவில் இருந்த மூன்று வெளிநாட்டுத் தலைவர்கள் தன்னைச் சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் அன்வார் அதற்கு அனுமதிக்கவில்லை என்றும் மகாதீர் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *