கொல்கத்தாவில் இளம் பெண் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவரின் உடலில் 150 மில்லி கிராம் உயிரணு செல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக மருத்துவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் முதுகலை மருத்துவம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் செமினார் அறையில் தூங்க சென்றார். இந்நிலையில், மறுநாள் காலை அவர் அரை நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்தார். மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் கழுத்து எலும்பு முறிந்துள்ளது. அந்தரங்க பாகங்கள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. பின்னர் அவர் மூச்சுத்திணறி படுகொலை செய்யப்பட்டார். கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது. முழு செயல்முறையும் காணொளி மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் போது அவரது தாயார் உட்பட இரு பெண்கள் உடனிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக கூறப்படும் சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையை கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உயிரிழந்த மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகக் கொடூரமான பாலியல் வன்முறைத் தாக்குதலால் மருத்துவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையின் பல பாகங்களில் காயத்தின் அறிகுறிகள் தென்பட்டன. இரண்டு காதுகளிலும், உதடுகளிலும், கழுத்திலும் கடித்த அடையாளங்கள் உள்ளன. மேலும், அவரது உடலில் 150 மில்லி கிராம் உயிரணுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெண் மருத்துவரின் உடலில் 150 மில்லிகிராம் உயிரணுக்கள் காணப்பட்டதாகவும், இது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால்  அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதைக் காட்டுவதாகவும் மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *