வாகனம் மின்கம்பத்தில் மோதி இளம் பெண் பலி!

top-news
FREE WEBSITE AD


 கோத்தா பாரு, ஜூன் 18: கோல கிராய் - குவாங் மூசாங் சாலையில் இன்று காலை வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தை மோதியதில் இளம் பெண் ஒருவர் பலியானார். நால்வர் காயமுற்றனர்.

 

இச்சம்பவம் குறித்து இன்று காலை 7.17 மணியளவில் பொது மக்களிடமிருந்த தகவலைப்  பெற்றதாக கிளந்தான் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

 

இதனை அடுத்து சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள்

விரைந்து செயல்பட்டு அந்த வாகனத்தில் சிக்கியிருந்த இளம் பெண்ணை சிறப்பு உபகரணங்கள் கொண்டு மீட்டனர்.

 

இந்நிலையில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட வேளையில், மற்றொருவர் கடுமையான காயங்களுக்கும் மேலும் மூவர் லேசான காயங்களுக்கும் உள்ளானதாக அவர் கூறினார்.

காயமுற்றவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *