மாடு மீது மோதியதில் இளைஞர் பலி!

top-news
FREE WEBSITE AD

குவாந்தன், ஜூன் 7: குவாந்தான் அருகே ஜாலான் பந்தாய் செப்பாட் பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 20 வயதுடைய மொஹமட் டேனியல் அஸ்ரப் அப்துல் ஜாஹிர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உணவுக் கடை உதவியாளரான டேனியல், தஞ்சோங் லம்பூரில் இருந்து கம்போங் செரோக் பலோவில் உள்ள தனது வீட்டை நோக்கி யமஹா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக குவாந்தான் காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

நேரான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ​​மாடு ஒன்று திடீரென சாலையைக் கடந்தது. இதனால் தனியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்து மாடு மீது மோதும் நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *