வீட்டின் கழிப்பறை கோப்பைக்குள் மலைப்பாம்பு! – சிறுவனைக் கடித்தது
![top-news](https://tamilmalar.my/public/uploads/images/newsimages/maannewsimage12022025_071344_பஅஹஹ் போஜ் '.jpg)
- Shan Siva
- 12 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 12: அம்பாங், சௌஜனா மெலாவதியில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறையில் உள்ள கோப்பையில் இருந்த மலைப்பாம்பு ஆறு வயது சிறுவனை கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பானது.
ஹாடி என அடையாளம் காணப்பட்ட சிறுவன், கழிப்பறைக்குச் சென்று கழிப்பறை மூடியைத் தூக்கும்போது, இடுப்புப் பகுதியிலும் கையிலும் பாம்பு கடித்துள்ளது. இதனை ஹரியன் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
தான், சமைத்துக் கொண்டிருந்தபோது, மகன் அலறிக் கொண்டு
அறையிலிருந்து ரத்தம் வழிய ஓடி வந்ததில் அதிர்ச்சியடைந்ததாக ஹாடியின் தாய் அடிபா அஜீஸ் கூறினார்.
இதனை அடுத்து உடனடியாக அண்டை வீட்டாரிடம் உதவி கேட்கச் சென்றதாகவும், ஆம்புலன்ஸ் மற்றும் பொது பாதுகாப்புக்கு அழைத்ததாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிகிச்சைக்காக அம்பாங்க் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அவனது நிலை சீராக உள்ளது. இதற்கிடையில், பொது பாதுகாப்புப்
பணியாளர்களால் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *