விக்டோரியா பாலத்திலிருந்து கீழே விழுந்து 3 வயது சிறுவன் பலி
- Shan Siva
- 01 Sep, 2026
கோலாலம்பூர், செப் 2: சுங்கை சிப்புட் எங்கோர் பகுதியில் விக்டோரியா
பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.
சம்பவம்
நடந்தபோது, பாதிக்கப்பட்ட
சிறுவன் தனது 42 வயது தந்தையுடன் அந்த வரலாற்றுப் பாலத்தில் நடந்து
சென்றுகொண்டிருந்தான் என்று மாவட்டக் காவல் தலைவர் சரண் ஐ வான் கூறினார்.
பாலத்தின் மீது
நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுவன்
தனது தந்தையின் கைகளைப் பிடித்திருந்தார். அப்போது, பாலத்தின் கட்டமைப்பில் இருந்த ஒரு இடைவெளி வழியாக கீழே
விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழே இருந்த தார்
சாலையில் விழுந்த பிறகு, அப்போது உயிருடன்
இருந்த பாதிக்கப்பட்டவர், மருத்துவமனையின்
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், இரவு 7.40 மணிக்கு அச்சிறுவன் இறந்துவிட்டதாக
அறிவிக்கப்பட்டார் என்று அவர்
கூறினார்.
குளுவாங்கைச்
சேர்ந்த அவர்கள் விடுமுறைக்காக அங்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



