பள்ளியில் இளம் இந்திய ஆசிரியை தூக்கிலிட்டு மரணம்!
- THINAGAREN SANGGAREN
- 01 Aug, 2026
ஆகஸ்ட் 1,
பள்ளியில் ஆசிரியை ஒருவர் தூக்கிலிட்டு இறந்ததாக வெளிவந்த செய்தி உண்மை தான் என்றும், அவர் 30 வயதுள்ள இளம் இந்திய பெண் ஆசிரியை என்றும் HULU SELANGOR மாவட்டக் காவல் ஆணையர் MANIMARAN MUNIANDI இன்று உறுதிப்படுத்தினார். நேற்று காலை 7.15 மணிக்கு KERLING நகரில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலம் தகவல் தெரிவித்ததாக HULU SELANGOR மாவட்டக் காவல் ஆணையர் MANIMARAN MUNIANDI தெரிவித்தார்.
உயிரிழந்த ஆசிரியைக் குறித்து எந்தவொரு தகவலும் இப்போதைக்கு வெளியிட முடியாது. விசாரணைக்குப் பின்னர் முறையான தகவல்கள் வழங்குவதாகவும் ஆசிரியரின் அடையாளங்களை பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பள்ளியின் முதல் மாடியில் உள்ள ஆசிரியர் அறையில் 30 வயதுள்ள ஆசிரியைத் தூக்கிலிட்டபடி காணப்பட்டதாகவும் HULU SELANGOR மாவட்டக் காவல் ஆணையர் MANIMARAN MUNIANDI. உயிரிழந்த ஆசிரியை 30 வயது இளம் இந்திய ஆசிரியை என்றும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள் அவர் உயிரிழந்த்தை உறுதிப்படுத்தியாகவும் HULU SELANGOR மாவட்டக் காவல் ஆணையர் MANIMARAN MUNIANDI தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



