இரண்டாவது இணைப்புச் சாலையில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம்: 8 பேர் கைது
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
பெட்டாலிங் ஜெயா, ஆக. 24-
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தை நடத்துவதற்காக மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலையில் போக்குவரத்துக்குத் தடை செய்தது தொடர்பாக எட்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
26 முதல் 45 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று கூலாய் காவல்துறைத் தலைவர் டான் செங் லீ தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த மற்ற சாட்சிகளையும் காவல்துறை தேடி வருவதாகவும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு வருவதாகவும் டான் கூறினார்.
பந்தயத்திற்கு வசதி செய்வதற்காக நெடுஞ்சாலையில் மற்ற வாகன ஓட்டிகளை ஒரு குழுவினர் மறிப்பதைக் காட்டும் 30 வினாடி காணொளி ஒன்று வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



