‘நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது’ – இயக்குநர் மிஷ்கின் கருத்து

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 20-

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் மிஷ்கின் விருதுகள் குறித்து தனது தனித்துவமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது. விருது என்பது ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் ஊக்கம்தான். ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி மக்களின் அங்கீகாரமே” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய மிஷ்கின், “தங்கலான், வாழை போன்ற சிறந்த படங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்று குறை கூற வேண்டியதில்லை. மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் விருதுகளுக்காக படம் எடுப்பவர்கள் அல்ல. விருது கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்கவில்லை என்றாலும் நம்முடைய சக கலைஞர்களுக்குத்தானே கிடைக்கிறது என்ற மனநிலையுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர், “என்னுடைய எந்தப் படத்தையும் இதுவரை தேசிய விருதுக்காக அனுப்பியதே இல்லை. இனியும் அனுப்பமாட்டேன். மக்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ஒரு படத்தை வெற்றிப்படமாக்கினால், அதைவிட பெரிய விருது வேறு எதுவும் இல்லை. பார்வையாளர்களின் அன்பும் ஆதரவும் தான் ஒரு கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரம்” என்று வலியுறுத்தினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *