நடுவானில் திடீரென குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: 20 பயணிகள் காயம்

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஆக. 5-

 தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து இந்தியாவின் டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென கடுமையாக குலுங்கியதில் 20 பயணிகள் காயமடைந்தனர்.

ஏர் இந்தியா விமானம் புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கடும் காற்றழுத்த மாற்றத்தால் விமானம் பலமாக குலுங்கியது.

இந்த எதிர்பாராத குலுக்கலால் சில பயணிகள் இருக்கைகளில் இருந்து முன்னோக்கி தள்ளப்பட்டதாகவும், சிலர் இருக்கைகளில் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். இந்த சம்பவத்தில் 20 பயணிகள் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

இதையடுத்து விமானம் எந்தவித பாதிப்பும் இன்றி டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. காயமடைந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *