திரிசூலத்தை அவமதித்த தமீம் தாரி போலிஸில் சரண்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 19: இந்து மத புனித சின்னமான திதிசூலத்தை அவமதித்தது உள்ளிட்ட சர்ச்சை தொடர்பாக  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறிய சர்ச்சை செயல்பாட்டாளர் தமீம் தாஹ்ரி அப்துல் ரசாக், நேற்று காவல்துறையிடம் சரணடைந்தார்.

நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அஹ்மத், தமீம் பிற்பகல் சுமார் 12.45 மணியளவில் போர்ட் டிக்சன் காவல் தலைமையகத்தில் சரணடைந்ததாகவும், காவலில் வைப்பதற்கான மனு தொடர்பாக இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.

கிளந்தான்எல்லையில் சட்டவிரோதமான பாதை வழியாக மலேசியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு, தமீம் நான்கு மாதங்களுக்கும் மேலாக தாய்லாந்தில் தங்கியிருந்ததாகவும், அதன் பிறகு தனக்கு எதிரான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவர் சரணடைந்ததாகவும் அவர் கூறினார்.

இந்துக்களின் புனிதப் பொருளான திரிசூலத்தை அவர் அவமதிப்பதாகக் கூறப்படும் ஒரு காணொளியைத் தொடர்ந்து, தமீம் மீது மொத்தம் 192 காவல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *