குப்பையில் RM 649, 840 மதிப்புள்ள கஞ்சா! பெர்லிஸ் சுங்கத்துறை பறிமுதல்
- Shan Siva
- 12 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 12: 8 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா அடங்கிய ஒரு சாக்கை
குப்பைக் குவியலில் மறைக்க முயன்ற போதைப்பொருள் கும்பலின் முயற்சி, பெர்லிஸ் சுங்கத் துறையால் முறியடிக்கப்பட்டது.
இதன் வழி RM649,840
மதிப்புள்ள 8.123 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டது, இந்த ஆண்டு துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆறு அமலாக்க
நடவடிக்கைகளில் ஒன்று என்று பெர்லிஸ் சுங்கத் துறை இயக்குநர் முகமது ஃபூரிமான்
ஹத்தார் தெரிவித்தார்.
பாடாங் பெசார்,
லெம்பா சூப்பிங்கில் ரோந்துப் பணியில்
ஈடுபட்டிருந்த பெர்லிஸ் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினர், ஒரு கடைக்குப் பின்னால் சந்தேகத்திற்கிடமான
வெள்ளைச் சாக்கைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, மே 21 அன்று காலை சுமார் 11.50 மணியளவில் இந்தப்
போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அமலாக்கப்
பணியாளர்கள் அதைச் சோதிக்க மாட்டார்கள் என்று கருதி, பிடிபடாமல் தப்பிப்பதற்காக, போதைப்பொருள் நிரம்பிய சாக்கை ஒரு குப்பைக் குவியலில்
விட்டுச் செல்வதே அந்தக் கும்பலின் செயல்முறையாக இருந்தது.
இதனை அடுத்து ஜூன்
19 அன்று புலாவ் பத்து லயாங்கில் உள்ள ஒரு மேடையில் கண்டெடுக்கப்பட்ட, 17 கிலோ எடை மற்றும் RM51,000 மதிப்புள்ள 17 கஞ்சா கட்டிகளைக் கடத்தும்
முயற்சியையும் கோலா பெர்லிஸ் கடல்சார் அமலாக்கப் பிரிவு முறியடித்ததாக அவர்
கூறினார்.
இந்த இரண்டு
வழக்குகளும் 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றன, என்று அவர்
கூறினார்.
சிகரெட்டுகள்,
எரிவாயு அடுப்புகள் மற்றும் மதுபானங்கள்
சம்பந்தப்பட்ட மேலும் நான்கு கடத்தல் முயற்சிகளையும் இந்தத் துறை முறியடித்ததாக
ஃபூரிமன் கூறினார்.
இந்த ஆறு வழக்குகளிலிருந்தும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு, சுங்க வரிகள் மற்றும் பிற வரிகள் உட்பட, RM1.77 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



