தலைநகரில் மறைமலை அடிகளாரின் 150-ஆவது பிறந்தநாள் விழா! அடிகளாரின் பெயரன் கலந்துகொள்கிறார்
- Shan Siva
- 20 Aug, 2026
இந்நிகழ்வில் மறைமலை அடிகளாரின் பெயரன் மறை திரு தாயுமானவன் எழுதிய ‘தனித்தமிழ்த் தந்தையின்
வரலாற்றுச்சுவடுகள்’ எனும் நூலும் வெளியீடு காண்கிறது.
ஓம்ஸ் அறவாரியத்தின்
ஆதரவில் நடைபெறும் இந்நிகழ்வில், ஓம்ஸ் அறவாரியத்
தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை மேற்கொண்டு, நூலினை வெளியீடு செய்து வைக்கிறார். மேலும் பல முக்கிய பிரமுகர்களும்
கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
தமிழ் ஆர்வலர்கள்
இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Maraimalai Ilakkuvanar
விழா சிறப்புற வாழ்த்துகிறேன். தமிழ்க்காப்பு,தமிழ் மறுமலர்ச்சி என்பவை அடிகளார் என்னும் தங்கநாணயத்தின் இரண்டு பக்கங்கள்.மலேசியத் தமிழர்கள் இவ்விரு துறைகளிலும் தொடர்ந்து தொண்டாற்றுமாறு வேண்டுகிறேன்.
சோ.வீ.தமிழ்மறையான்
தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் 150ஆம் ஆண்டு தமிழ்போற்றும்நிகழ்ச்சி நிரலை தவறவிட்டு வருந்துகிறேன்.



