மீண்டும் PKRஇல் சேவியர் ஜெயகுமார்
- Shan Siva
- 18 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 18: ஓரங்கட்டப்பட்டதாக உணரும் கட்சி மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்புமாறு PKR தலைவர்அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பிறகு, PKR முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கட்சிக்குத் திரும்பியதை உறுதிப்படுத்தியுள்ளார்.
PKR-க்குத் திரும்புவதை உறுதி செய்யுமாறு கேட்கப்பட்டபோது, சேவியர் சுருக்கமாக “ஆம்” என்று பதிலளித்தார்.
சனிக்கிழமையன்று, PKR-இன் தேசிய மாநாட்டில் ஆற்றிய தனது முக்கிய உரையில், கட்சி மூத்த தலைவர்களிடம் மன்னிப்புக் கோரியதோடு, அவர்கள் கட்சிக்குத் திரும்பி அதன் சீர்திருத்தப் போராட்டத்தைத் தொடருமாறும் அன்வார் வலியுறுத்தினார்.
PKR எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போதைய பிரதமர் முகைதீன் யாசினை ஒரு சுயேச்சையாக ஆதரிப்பதற்காக, சேவியர் 2021-ல் கட்சியிலிருந்து விலகினார்.
2022-ல், அவர் பார்ட்டி பங்சா மலேசியாவில் சேர்ந்தார், ஆனால் அதற்கான காரணத்தை வெளியிட மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், முன்னாள் உதவித் தலைவர் தியான் சுவா மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், குறிப்பாக 'ரிஃபார்மாசி' இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளதாகவும் PKR செய்தி இணையதளமான 'சுவாரா கெடிலான்' செய்தி வெளியிட்டுள்ளது.
2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டதற்காக தியான் சுவா PKR கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அங்கு PKR-ன் பி. பிரபாகரன் அத்தொகுதியை வென்றார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



