வல்லரசு கனவுக்கு முன் விவசாயிகளின் அரசாக மாற வேண்டும்: முதல்வரின் கொள்கையை வலியுறுத்திய அமைச்சர் வினோத்
- Surendran Sumdraraj
- 06 Aug, 2026
சென்னை, ஆக. 6-
இந்தியா வல்லரசாக மாறும் முன்பு, முதலில் விவசாயிகளின் அரசாக உருவாக வேண்டும் என்பதே முதலமைச்சரின் அடிப்படை கொள்கை என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை அவர் 2026–27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை (வேளாண் பட்ஜெட்) தாக்கல் செய்தபோது வலியுறுத்தினார்.
வேளாண்மை என்பது உணவுப் பாதுகாப்பின் அடித்தளம் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமான துறையாகும் என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், நவீன தொழில்நுட்பங்களை வேளாண்மையில் அறிமுகப்படுத்துதல் மற்றும் நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பது ஆகியவற்றில் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



