பீகார் இடைத்தேர்தல்: பாஜக கோட்டையை வீழ்த்தி பிரசாந்த் கிஷோர் வெற்றி

top-news
FREE WEBSITE AD

பாட்னா, ஆக. 4-

பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் நீண்டகால கோட்டையாகக் கருதப்பட்ட இந்த தொகுதியில் அவர் பெற்ற வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பாங்கிபூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிதின் நபின், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர், பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். அவர் 64,151 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் 44,827 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 19,324 ஆகும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *