ரொம்பின் அருகே விபத்து! தாய் - மகன் பலி
- Shan Siva
- 22 Aug, 2026
குவாந்தான், ஆக 22: பகாங், ரொம்பின் அருகே, குவாந்தான்-சிரம்பான்
சாலையின் 149.9 கி.மீ. தொலைவில்
நேற்று வாகனம் ஒன்று சறுக்கி பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதில் இருந்த ஒரு ஆசிரியை மற்றும்
அவரது மகன் உயிரிழந்தனர்.
இரவு சுமார் 9.30 மணியளவில் நிகழ்ந்த
இந்த விபத்தில், 46 வயதான கார்டினி
என்கடனன் மற்றும் அவரது ஆறு வயது மகன் அகிஃப் அஸ்மி ஆகியோர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்ததாக ரொம்பின் காவல் நிலையத் தலைவர் ஷெரீஃப் ஷாய் ஷெரீஃப் மொண்டோய், கூறினார்.
முதற்கட்ட விசாரணையில்,
உயிரிழந்தவரின் 47 வயதான கணவர்
ஓட்டிவந்த MPV, நெகிரி செம்பிலானின் சிரம்பானிலிருந்து
ரொம்பினில் உள்ள ஃபெல்டா கெரடோங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து
நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, குடும்பத்தினர் பயணித்த வாகனம் சாலையில் கிடந்த ஒரு மரத்துண்டின் மீது
மோதியதால், ஓட்டுநர்
கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கி சாலையின்
வலதுபுறத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஒரு
அறிக்கையில் தெரிவித்தார்.
விபத்தில் ஓட்டுநருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவருக்கு முவாட்சம் ஷா
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தலையில் காயமடைந்த அவரது மனைவியும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும்
ஷெரீஃப் ஷாய் கூறினார்.
மேலும், இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச்
சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ்
விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



