சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம் – சட்டம், ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 3 –

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தின் போது தமிழகத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தமிழக சட்டசபையில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 43 துறைகள் மீதான விவாதங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் வசம் உள்ள முக்கிய துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் முதலில் கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின்னர் மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கும்.

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *