யூரோ 2028 தகுதிச்சுற்றில் இங்கிலாந்து; 2030 உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு நேரடி இடம் – சர்ச்சை எழுகிறது

top-news
FREE WEBSITE AD

லண்டன், ஜூலை 27-

 யூரோ 2028 கால்பந்து தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், இங்கிலாந்து அத்தொடருக்குத் தகுதி பெறும் சுற்றுகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், 2030 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவுக்கு நேரடி தகுதி வழங்கப்பட்டிருப்பது கால்பந்து ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2030 உலகக்கோப்பையை ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த மூன்று நாடுகளுக்கும் போட்டியில் பங்கேற்க நேரடி இடம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், உலகக்கோப்பையின் 100-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தொடக்க ஆட்டங்களை நடத்தும் அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளுக்கும் தானாகவே தகுதி இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு கால்பந்து ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2026 உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட சில சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தொடர்ந்து, அர்ஜென்டினாவை எதிர்கால போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும் என கோரி லட்சக்கணக்கான ரசிகர்கள் மனுவில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *