தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்! - கோபிந்த் சிங் டியோ

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக10: ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், தமிழ்ப் பள்ளிகளுக்கும் (SJKT) அரசு தொடர்ந்து வலுவூட்டும் என இலக்கவியல்துறை  அமைச்சர் கோவிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பள்ளிகள் வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல, மாணவர்களிடையே கற்றல், கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர்  கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற 43வது  எஃபிங்ஹாம் எஸ்டேட் தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் இளம் தடகள வீரர்கள் பங்கேற்றதைக் காண்பது, பள்ளிகளுக்கு வலுவூட்டுவதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டுவதற்குமான முயற்சிகள் தொடர வேண்டும் என்பதை  நினைவூட்டுகிறது என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும், அனைவருக்கும் வளமான மலேசியாவைக் கட்டியெழுப்புவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கவும் வாய்ப்பு பெறத் தகுதியானவர்கள், என்று அவர் கூறினார்.

2023 முதல் 2026 வரை, நாடு தழுவிய தமிழ்ப் பள்ளிகளுக்கான பராமரிப்புப் பணிகள், மேம்படுத்தல்கள் மற்றும் புதிய வசதிகளைக் கட்டுவதற்காக மொத்தம் RM237.48 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

இது, இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும், நமது குழந்தைகள் தங்கள் பள்ளிப் பருவம் முழுவதும் சிறந்ததைப் பெறுவதை உறுதி செய்வதையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது,  என்று அவர் கூறினார்.

நாடு இன்னும் பொருளாதார சவால்களை எதிர்கொண்ட போதிலும், தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இந்த ஒதுக்கீடு நிரூபிக்கிறது என்று கோவிந்த் மேலும் கூறினார்.

இளம் தலைமுறைக்கு உகந்த கற்றல் சூழலை உருவாக்க, கல்வி வசதிகளை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *