ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- Surendran Sumdraraj
- 30 Jul, 2026
ஹமான், ஜூலை 30-
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
ஜோர்டான் மற்றும் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் காரணமாக சில பகுதிகளில் வெடிப்புச் சத்தம் கேட்கப்பட்டதுடன், இடிபாடுகள் விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், உயிரிழப்பு மற்றும் சேதம் தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



