DAP-ஆல் இனி சாத்தியமில்லை! - பி.ராமசாமி
- Shan Siva
- 11 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 10: டிஏபி கட்சி அரசாங்கத்தில் நீடித்தாலும் சரி, நீடிக்காவிட்டாலும் சரி, அதிருப்தியடைந்த மலாய் அல்லாத வாக்காளர்களை மீண்டும் வென்றெடுப்பது அவர்களால் இனி சாத்தியமில்லை என்று உரிமை கட்சியின் தலைவர் பி. ராமசாமந்தெரிவித்துள்ளார்.
40 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஐந்து அமைச்சர் பதவிகளையும் கொண்டிருந்த போதிலும், அரசாங்கத்தில் தனது நிலையைப் பயன்படுத்தி மலாய் அல்லாதவர்களுக்கு அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவர கட்சி தவறிவிட்டது என்று அவர் கூறினார்.
டிஏபி கட்சி அதன் பதவிக்காலம் முழுவதும் அரசாங்கத்தில் நீடித்தாலும் சரி அல்லது ஆளும் கூட்டணியை விட்டு வெளியேறினாலும் சரி, மலாய் அல்லாதவர்கள் அக்கட்சியை விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
அரசாங்கத்தில் இணைந்த பிறகு, சீன மற்றும் இந்திய சமூகங்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து டிஏபி கட்சி தனது குரலைக் குறைத்துவிட்டதாகவும், அதன் தலைவர்கள் "மலாய் மேலாதிக்க நலன்கள்" என்று அவர் விவரித்தவற்றுக்கு இணங்கிச் செல்வதாகவும் அவர் கூறினார்.
கட்சிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதிகாரம், பதவிகள் மற்றும் சலுகைகள் என்ற வலையில் சிக்கிய பிறகு அதை வீணடித்துவிட்டது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



