கேரள வெள்ளத்தில் முதியவரை காப்பாற்றி உயிரிழந்த நீச்சல் வீரர்: நெகிழ வைத்த தியாகம்

top-news
FREE WEBSITE AD

கண்ணூர், ஆக. 6-

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, 61 வயது முதியவரை காப்பாற்ற தனது உயிரையே தியாகம் செய்த நீச்சல் வீரரின் சம்பவம் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மீந்துள்ளி தீவு அருகே பாயும் கரியங்கோடு ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்த நிலையில், ஆபத்தில் சிக்கிய 61 வயது முதியவரை மீட்க நீச்சல் வீரரும் மீட்பு தன்னார்வலருமான ஆர். ராஜேஷ் முயன்றார்.

முதியவரைப் பாதுகாப்பாக மீட்ட ராஜேஷ், அவரிடம் உயிர்காக்கும் மேலாடை (லைஃப் ஜாக்கெட்) இல்லாததை உணர்ந்து, தன்னிடம் இருந்த லைஃப் ஜாக்கெட்டை அவருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் முதியவர் உயிர் தப்பிய நிலையில், பலத்த நீரோட்டத்தில் சிக்கிய ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது. அவரது துணிச்சல் மற்றும் தன்னலமற்ற செயல் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *