காட்டுத்தீ கொடூரம்: ஐரோப்பாவில் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்
- Surendran Sumdraraj
- 25 Jul, 2026
பிரான்ஸ், ஜூலை 25-
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ காரணமாக, 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு கருதி தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடும் வெப்பம், வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதால், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள போர்டோ நகரைச் சுற்றியுள்ள கிரோண்ட் மற்றும் லாண்ட்ஸ் பகுதிகள் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல குடியிருப்புப் பகுதிகள், சுற்றுலா தளங்கள் மற்றும் முகாம்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இதேபோல், ஸ்பெயினிலும் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பல பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. தீயை கட்டுப்படுத்த ராணுவத்தினரும் அவசர மீட்புப் படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



