டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து என். சந்திரசேகரன் ராஜினாமா
- Surendran Sumdraraj
- 12 Aug, 2026
மும்பை, ஆக. 12-
டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து என். சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் டாடா குழுமத்தில் எதிர்பாராத தலைமை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சந்திரசேகரனின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும், அவர் உடனடியாக பதவியில் இருந்து விலகவில்லை என்றும், தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தற்போதைய பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
சந்திரசேகரன் கடந்த 2017ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். சுமார் ஒன்பது ஆண்டுகளாக டாடா குழுமத்தின் உயர்மட்ட தலைமைப் பொறுப்பை அவர் வகித்து வந்துள்ளார்.
அவரது ராஜினாமா குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, டாடா குழுமத்தைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



