குரூனில் மீன் குளத்தில் விழுந்து ஒருவர் மரணம்
- Shan Siva
- 03 Sep, 2026
கோலாலம்பூர், செப் 3: நேற்று இரவு, குரூன், ஜலான் ஜெனியாங், கம்போங் பத்து 3-இல் ஒரு பள்ளிக்கு முன்னால் இருந்த மீன் குளத்தில் விழுந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நேற்று மாலை 5.46 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மண்டலம் 2-இன் தலைவர், முகமது நைம் மாட் ஜாஃபர், கூறினார்.
ஏழு பேர் கொண்ட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தில் இருந்த பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர் மீன் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மேற்பரப்புத் தேடல் முறையைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இரவு 9.16 மணிக்கு பாதிக்கப்பட்டவரின் உடலைக் கண்டுபிடித்தனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், உடல் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சுமார் 30 வயதுகளில் இருக்கலாம் என மதிப்பிடப்படும் பாதிக்கப்பட்டவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை.
சம்பவ இடத்தில் இருந்த சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவரின் மரணத்தை உறுதிப்படுத்தினர் என்று கூறிய அவர், மீட்பு நடவடிக்கை இரவு 11.19 மணிக்கு முடிவடைந்ததாகவும் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



