மலேசியாவில் மீண்டும் ஃபார்முலா ஒன் பந்தயம்?! – மகாதீர் யோசனை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 13: மலேசியா மீண்டும் ஃபார்முலா ஒன் எனப்படும் F1 கார் பந்தயத்தை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

செப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான F1 நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்தால், அதன் மூலம் கிடைக்கும் சுற்றுலா வருவாய் மற்றும் பொருளாதார பலன்களை ஆய்வு செய்து, மலேசியா மீண்டும் தனது F1 போட்டி நடத்தும் உரிமையைப் பெறுவது குறித்து முடிவு செய்யலாம் என அவர் கூறியுள்ளார்.

F1 பந்தயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பல நாட்கள் மலேசியாவில் தங்குவதால், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலாத் துறைக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.

மேலும், F1 போட்டிக்காக முன்பு செலுத்தப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் கட்டணம், அப்போது அதிகமாகத் தோன்றியிருந்தாலும், தற்போதைய பண மதிப்பில் அவ்வளவு பெரிய தொகையாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

செப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீட்டுத் தொகையை ஏற்கனவே மலேசியா ஈட்டிவிட்டதாகவும், தற்போது அந்த சுற்றுப்பாதையை இலவசமாகப் பயன்படுத்தி வருவதாகவும் மகாதீர் கூறினார்.

மலேசியாவில் முதலாவது F1 போட்டி 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 19 ஆண்டுகள் நடைபெற்ற மலேசிய கிராண்ட் பிரிக்ஸ், 2017ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு F1 போட்டி மீண்டும் செப்பாங் சுற்றுப்பாதைக்கு வருகிறது. ஆனால், இந்தப் போட்டி மலேசியாவின் சொந்த F1 பந்தயமாக இல்லாமல், பஹ்ரைனுடன் செய்யப்பட்ட ஏற்பாட்டின் கீழ் மலேசியாவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் சுற்றுலா மற்றும் பொருளாதாரத் தரவுகள், எதிர்காலத்தில் மலேசியா தனது சொந்த F1 போட்டியை நடத்தும் உரிமையை மீண்டும் பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க உதவும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *