NSE சாலையில் நான்கு வாகனங்கள் மோதல்! ஒருவர் பலி
- Shan Siva
- 02 Sep, 2026
கோலாலம்பூர், செப் 2: வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நான்கு வாகனங்கள்
மோதிக்கொண்ட விபத்தில், ஒரு மோட்டார்
சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார், மற்றொருவர்
படுகாயம் அடைந்தார்.
நேற்று பிற்பகல்
1.04 மணிக்கு கி.மீ 127.4-ல் நடந்த இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும்
2 பெரோடுவா மைவி கார்கள் சம்பந்தப்பட்டிருந்தன என்று பினாங்கு தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
மோட்டார்
சைக்கிளின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப்
பணியாளர்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில் அவருடன்
பயணித்த பெண் பயணி சிறு காயங்களுடன் தப்பினார்.
பெரோடுவா மைவி
கார்களில் இருந்த இருவர் காயமின்றி தப்பியதாக ஜான் கூறினார்.
உயிரிழந்தவர்
காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக சுகாதார அமைச்சகத்தின் ஆம்புலன்ஸ்கள்
மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



