பழனி கோவில் நில மோசடி விவகாரம்: திண்டுக்கல்லில் ஜூலை 25-ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
- Surendran Sumdraraj
- 22 Jul, 2026
திண்டுக்கல், ஜூலை 22-
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மதிப்புமிக்க நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 25-ஆம் தேதி திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த அதிமுக அறிவித்துள்ளது.
கோவிலுக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், அதன் உண்மையான மதிப்பை விட மிகவும் குறைந்த தொகைக்குத் தனியாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அந்த நிலப் பதிவை செல்லாது என அறிவித்ததுடன், வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் மற்றும் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



