ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 பதிவு; 13 பேர் உயிரிழப்பு
- Surendran Sumdraraj
- 29 Jul, 2026
தோக்கியோ, ஜூலை 29-
ஜப்பானின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், சாலைகள் பிளவுபட்டன. குமமோட்டோ மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பலர் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், காகித ஆலை ஒன்றில் புகைக்கூண்டு இடிந்து விழுந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பிந்தைய அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



