பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஆக 21:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆகஸ்ட் 30 அன்று வரும் தேசிய தினத்திற்கு முந்தைய நாள் அறிவிப்பு மற்றும் செப்டம்பர் 16 அன்று நடைபெறும் மலேசிய தினக் கொண்டாட்டங்களின் போது அறிவிக்கப்படும் அறிவிப்பு உட்பட, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அந்த அறிவிப்புகள் குறித்த மேலதிக விவரங்களை அவர் வழங்கவில்லை.
மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்டு, ஆகஸ்ட் 31-க்குள் நாட்டிற்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாகவும், பின்னர், செப்டம்பர் 16 அன்று மலேசிய தினத்திற்காக கூச்சிங் செல்ல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, ஆகஸ்ட் 31-க்கு முந்தைய நாள் ஒரு அறிவிப்பும், செப்டம்பர் 16 அன்று மற்றொன்றும், அக்டோபர் தொடக்கத்தில் வரவு செலவுத் திட்டத் தாக்கல் சமயத்தில் இன்னொன்றும் வெளியிடப்படும், என்று நேற்று நடைபெற்ற தெமு அன்வார் அமர்வில் அவர் கூறினார்.
தற்காலிகப் பணிப் பொருளாதாரத்தில் (gig economy) ஈடுபட்டுள்ள இளைஞர்களின் நலன் மற்றும் நிதிப் பாதுகாப்பைப் பேணுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்த ஒரு மாணவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
மலேசிய தற்காலிகப் பணிப் பொருளாதார ஆணையத்தை (SEGiM) நிறுவுவதன் மூலமும், சிறு வணிகங்கள் தொடர்பான புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவதன் மூலமும், தற்காலிகப் பணிப் பொருளாதாரத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்தி வருவதாகப் பிரதமர் கூறினார்.
தற்போதுள்ள உதவி போதுமானதாக இல்லை என்ற கருத்துக்கள் இருந்தாலும், அந்தத் தரப்பினரின் நலனைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், அன்வார் வணிகத்தில் ஈடுபட விரும்பும் பட்டதாரிகளுக்கு, தேசிய தொழில்முனைவோர் குழு பொருளாதார நிதியம் (டெக்குன்) உட்பட, நிதியுதவி பெறுவதற்கான வழிகளை அரசாங்கம் எளிதாக்கும் என்று அவர் கூறினார்.
மாறிவரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளைக் கருத்தில் கொண்டு, நிதியுதவி பெறுவதற்கு முன்பு விண்ணப்பதாரர்கள் ஒரு வணிக அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற தற்போதைய நிபந்தனை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *