Mykad அச்சிடுவதில் சிக்கல்! இப்போதைக்கு வராதீர்கள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 1: தேசியப் பதிவுத் துறையான NRD, தற்போதுள்ள MyKad கட்டமைப்பிலிருந்து புதிய தலைமுறை MyKad-க்கு மாறி வருவதால், அச்சிடும் சேவைகளில் தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த இடையூறு இன்று முதல் செப்டம்பர் 7 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் MyKad-ஐ மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ அவசரத் தேவை இல்லாத பொதுமக்கள், இந்தக் காலகட்டத்தில் அத்தகைய பரிவர்த்தனைகளை ஒத்திவைக்குமாறு அத்துறை அறிவுறுத்தியுள்ளது.

முதல் முறையாக விண்ணப்பிக்கும், குறிப்பாக 12 வயதை எட்டும் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், புதிய தலைமுறை MyKad கிடைக்கும்போது தங்கள் பிள்ளைகள் அதைப் பெறுவதற்காக, விண்ணப்பிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏற்பட்ட சிரமத்திற்குத் திணைக்களம் வருத்தம் தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதிய தலைமுறை MyKad குறித்த தகவல்களை NRD-யின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் தெரிந்துகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *