அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்: விஜய் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 10-

 தமிழ்நாட்டில் அரசு துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதைக் கட்டாயமாக்கும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பது தமிழ்நாட்டின் மாநில உரிமை என வலியுறுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையைப் பாதுகாப்பதில் தனது அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் விவாதமாக மாற வேண்டிய அவசியமில்லை என்றும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *