சிலாங்கூரைக் கைப்பற்றினால் போதும்; அடுத்து மத்தியில் நம்ம ஆட்சிதான்! - சனுசி
- Shan Siva
- 16 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 16: 16வது பொதுத் தேர்தலில், மாநில அளவிலும், அதைத் தொடர்ந்து கூட்டாட்சி அளவிலும் பக்கத்தான் ஹரப்பானை (PH) வீழ்த்துவதற்கான தொடக்கப் புள்ளியாக சிலாங்கூரை உருவாக்க பாஸ் விரும்புகிறது என்று சனுசி நோர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கியப் பொருளாதார மையமாக சிலாங்கூர் இருப்பதால், அது ஒரு முக்கியமான மாநிலம் என்று பெரிகாத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான அவர் கூறினார்.
சிலாங்கூரில் PH வீழ்ந்தால், கூட்டாட்சி அளவிலும் PH வீழ்ந்துவிடும், என்று நேற்று இரவு சிலாங்கூர் பாஸ் வளாகத்தில் நடைபெற்ற சிலாங்கூர் பாஸ் தேர்தல் இயந்திரக் கூட்டத்தில் பேசும்போது அவர் கூறினார்.
கெடாவின் மந்திரி பெசாராகவும் இருக்கும் சனுசி, வெறும் அரசியல் கோஷங்களின் அடிப்படையில் அல்லாமல், அரசாங்கத்தில் PH-ன் செயல்பாடுகளின் அடிப்படையில் பொதுமக்கள் அதை மதிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முந்தைய அரசாங்கங்களின் செயல்பாடுகளுடன் இதை ஒப்பிடுங்கள். PH என்ன சாதித்துள்ளது? அவர்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்பதை எங்களுக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



