அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்த காலக்கெடு நிறைவு: மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம்
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரிவான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட 60 நாள் காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால், இரு தரப்புக்கும் இடையே இறுதி உடன்பாடு ஏற்படாததால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக விரிவான அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடு நிறைவடைந்துள்ள போதிலும், முக்கிய விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



