தாபோங் ஹாஜி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 12: தாபோங் ஹாஜி  தொடர்பான, உண்மைக்கு முரணான மிகையான குற்றச்சாட்டுகளுக்கும் தவறான கண்ணோட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அழைப்பு விடுத்துள்ளார்.

TH மீதான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை குறித்த சிறப்பு நாடாளுமன்ற விவாதம், அந்த நிறுவனம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பவும், தெளிவுபடுத்தவும், தீர்க்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான வாய்ப்பை வழங்கியதாக அவர் கூறினார்.

இதற்குப் பிறகு, உண்மையின் அடிப்படையில் இல்லாமல் மிகையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவோ அல்லது தவறான கண்ணோட்டங்களை உருவாக்கவோ எந்தக் கட்சிகளும் முன்வராது என்று தாம் நம்புவதாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

விவாதங்களை தாம் கவனமாகக் கேட்டதாகவும், ஒவ்வொரு பிரச்சினையையும் முடிந்தவரை முழுமையாக விவாதிக்கவும், தெளிவுபடுத்தவும், தீர்க்கவும் நாடாளுமன்ற செயல்முறை ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும் ஜாஹிட் கூறினார்.

லட்சக்கணக்கான முஸ்லிம் வைப்பாளர்களுக்குச் சேவை செய்யும் இந்த நிறுவனம் வலுவாகவும், நம்பகத்தன்மையுடனும், நீண்டகால சர்ச்சைகளிலிருந்து விடுபட்டும் இருப்பதை உறுதிசெய்ய, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைத் தொடர்ந்து பொறுப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *