சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா? – டெல்லி ஐகோர்ட்டு இன்று முடிவு

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஜூலை 21-

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை, சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் இருந்து அவர் விரும்பும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டுமா என்பது தொடர்பான மனுவை டெல்லி ஐகோர்ட்டு இன்று விசாரித்து முடிவு எடுக்க உள்ளது. இந்த மனுவை வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு, சப்தர்ஜங் மருத்துவமனை, எய்ம்ஸ் (AIIMS) மற்றும் தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள், உடல்நல அறிக்கைகள் மற்றும் நோயியல் பதிவுகளை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையின் பொறுப்பு இயக்குநர் மற்றும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *