KL-Jalan Masjid India பாதுகாப்பான பகுதியே! DBKL அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 11: கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான  DBKL,  ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிற்கு வருபவர்களுக்கு அந்தப் பகுதி பாதுகாப்பானது என்றும் புவியியல் தகவல்கள் மற்றும் மண் ஆய்வுப் பதிவுகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அறிவித்துள்ளது.
அப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அமிழ்வுச் சம்பவத்தை விசாரிக்கும் பணிக்குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றதாகவும், பல்வேறு ஏஜென்சிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்ததாகவும் DBKL தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில்,  புவியியல் தகவல்கள் மற்றும் தற்போதுள்ள மண் ஆய்வுப் பதிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சிங்க்ஹோல் உள்ள இடம், கென்னி ஹில்ஸ் அமைப்பில் அமைந்துள்ளது, இது பொதுவாக ஸ்கிஸ்ட், பைலைட் மற்றும் குவார்ட்சைட் பாறைகளின் மாற்று அடுக்குகளைக் கொண்டுள்ளது என்று டிபிகேஎல் ஓர் அறிக்கையில் கூறியது.

மேலும், கட்டிடங்கள் மற்றும்  சிங்க்ஹோலை சுற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

பொதுப்பணித் துறை, கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, இண்டா வாட்டர் கன்சோர்டியம், ஆய்வு மற்றும் மேப்பிங் துறை, இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் மலேசியா மற்றும் மலேசியன் ஜியோடெக்னிக்கல் சொசைட்டி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பித்ததாக டிபிகேஎல் தெரிவித்தது!

DBKL தற்போது சம்பவம் நடந்த இடத்தில் பணிகளைத் தளர்த்தி வருகிறது.  முன்னதாக, விஸ்மா யாகின் முதல் ஜாலான் மஸ்ஜித் இந்தியா போலீஸ் சாவடி வரை 160 மீட்டர் பரப்பளவில் மூடல் நடவடிக்கை இருந்தது.

தற்போது மேல் நடவடிக்கை மற்றும் மூடப்படுவதற்காக  புதிய பகுதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும் என்றும் DBKL தெரிவித்துள்ளது.

விஸ்மா யாகின்  வாகன நிறுத்தத்தின் நுழைவாயிலிலிருந்து ஜாலான் மஸ்ஜித் இந்தியா/லோரோங் புனூஸ் 1 சந்திப்பு வரையும்,
ஜாலான் மஸ்ஜித் இந்திய போலீஸ் சாவடிக்கு முன்னால் உள்ள இரண்டாவது தாழ்வுப் பகுதியும் மற்றும்
லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானின் ஒரு பகுதியும் நடவடிக்கைகளுக்காக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *